சென்னையில் 83,377 பேருக்கு கொரோனா! மாவட்ட வாரியான ரிப்போர்ட்!!

 

சென்னையில் 83,377 பேருக்கு கொரோனா! மாவட்ட வாரியான ரிப்போர்ட்!!

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இன்று புதிதாக 4,538 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,60,907 ஆக அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலானோர் கோயம்பேடு சந்தைக்கு சென்றுவிட்டு பல்வேறு மாவட்டங்களுக்கு பயணித்தவர்கள் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் விவரத்தை மாவட்டரீதியாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அதில் சென்னையிலேயே கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.

சென்னையில் 83,377 பேருக்கு கொரோனா! மாவட்ட வாரியான ரிப்போர்ட்!!

சென்னையில் 83,377 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கோவையில் 1,785 பேருக்கும் திண்டுக்கல்லில் 1,356 பேருக்கும் திருநெல்வேலியில் 2,345 பேருக்கும், ஈரோட்டில் 464, திருச்சியில் 2,004 பேருக்கும், நாமக்கல் 278 மற்றும் ராணிப்பேட்டை 1,915, செங்கல்பட்டு 9,035, மதுரை 7,858, கரூர் 231, தேனி 2,229 மற்றும் திருவள்ளூரில் 8,329 பேருக்கு, தூத்துக்குடியில் 3,129, விழுப்புரத்தில் 2,039 பேருக்கும், கிருஷ்ணகிரியில் 345 பேருக்கும், திருவண்ணாமலையில் 3,709, தருமபுரியில் 324பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் திருப்பூரில் 400, கடலூர் 1,690, மற்றும் சேலத்தில் 2,186, திருவாரூரில் 830, நாகப்பட்டினம் 396, திருப்பத்தூர் 512, கன்னியாகுமரியில் 2,041 மற்றும் காஞ்சிபுரத்தில் 4,422 பேருக்கும், சிவகங்கை 1,260 மற்றும் வேலூரில் 3,628 பேருக்கும், நீலகிரியில் 371பேருக்கும், தென்காசி 926, கள்ளக்குறிச்சியில் 2,107 பேருக்கும், தஞ்சையில் 952, விருதுநகரில் 2,948, ராமநாதபுரத்தில் 2,249 பேருக்கும், அரியலூர் 609 மற்றும் பெரம்பலூரில் 200 பேருக்கும், புதுக்கோட்டையில் 907 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்த 1,512பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.