தமிழகத்தில் மேலும் 5,015 பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு 6.56 லட்சமாக உயர்வு

 

தமிழகத்தில் மேலும் 5,015 பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு 6.56 லட்சமாக உயர்வு

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் மூன்று கோடியே 72 லட்சமாக அதிகரித்துள்ளது. 10 லட்சத்து 7 ஆயிரம் பேர் உயிரிழக்க செய்த இந்த கொடிய வகை கொரோனா வைரசுக்கு இன்னும் முறையான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால், அதிக அளவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. கொரோனா வைரஸ்கான தடுப்பூசிகளை கண்டுபிடிப்பதில் பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன.

தமிழகத்தில் மேலும் 5,015 பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு 6.56 லட்சமாக உயர்வு

இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 5,015 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,56,385 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 90,107 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் பரிசோதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 83,22,832 ஆக அதிகரித்துள்ளது. இன்று பாதிக்கப்பட்டவர்களில் 3,053 பேர் ஆண்கள், 1,962 பேர் பெண்கள். 191 பரிசோதனை மையங்கள் தமிழகத்தில் உள்ளன.

தமிழகத்தில் மேலும் 5,015 பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு 6.56 லட்சமாக உயர்வு

இன்று மட்டும் 65 பேர் உயிரிழந்தனர். 39 பேர் தனியார் மருத்துவமனையிலும், 26 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10,252 ஆக அதிகரித்துள்ளது. இன்று 5,005 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,02,038 ஆக அதிகரித்துள்ளது.” எனக் குறிப்பிட்டுள்ளது.