காஞ்சி சங்கரமட முதியோர் இல்லத்தில் 34 முதியோருக்கு கொரோனா உறுதி!

 

காஞ்சி சங்கரமட முதியோர் இல்லத்தில் 34 முதியோருக்கு கொரோனா உறுதி!

காஞ்சி சங்கரமட முதியோர் இல்லத்தின் கிளையில் 34 பேர் முதியோர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தினந்தோறும் 5 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள் என்று தமிழக சுகாதாரத்துறையின் அறிக்கை கூறி வருகிறது. நேற்று ஒரே நாளில் 5,337 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,52,674 ஆக அதிகரித்துள்ளது.

காஞ்சி சங்கரமட முதியோர் இல்லத்தில் 34 முதியோருக்கு கொரோனா உறுதி!

இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டை அடுத்த கலவை பகுதியில் இயங்கிவரும் காஞ்சி சங்கர மடத்தின் கிளையான காஞ்சி சங்கர மட முதியோர் இல்லத்தில் 64 முதியவர்கள் வசித்துவருகின்றனர். இந்நிலையில் 34 நபர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தொற்று ஏற்பட்டுள்ள அனைவரும் வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நோய் தொற்று ஏற்பட்ட அனைவரும் 60லிருந்து 90 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.