தமிழகத்தில் இன்று புதிதாக 827 பேருக்கு கொரோனா! 20,000ஐ நெருங்கியது!!

 

தமிழகத்தில் இன்று புதிதாக 827 பேருக்கு கொரோனா! 20,000ஐ நெருங்கியது!!

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 58லட்சத்து 14ஆயிரமாக அதிகரித்துள்ளது. 3லட்சத்து 57ஆயிரம் பேரை உயிரிழக்க செய்த இந்த கொடிய வகை கொரோனா வைரசுக்கு இன்னும் முறையான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால், அதிக அளவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. கொரோனா வைரஸ்கான தடுப்பூசிகளை கண்டுபிடிப்பதில் பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன. தமிழகத்தில் நேற்று வரை சுமார் 18 ஆயிரத்து 500 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

தமிழகத்தில் இன்று புதிதாக 827 பேருக்கு கொரோனா! 20,000ஐ நெருங்கியது!!

இந்நிலையில் இன்று காணொலி வாயிலாக செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை விஜயபாஸ்கர், “வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 827பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 19,372 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 559 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 643 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 10,548 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 12பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 145 ஆகஅதிகரித்துள்ளது. கொரோனா பரிசோதனைக்கு தமிழகத்தில் 70ஆய்வகங்கள் உள்ளன. ” என தெரிவித்தார்.