தமிழகத்தில் மேலும் 817பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு 18,545 ஆக உயர்வு!!

 

தமிழகத்தில் மேலும் 817பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு 18,545 ஆக உயர்வு!!

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 57லட்சத்து 13ஆயிரமாக அதிகரித்துள்ளது. 3லட்சத்து 52ஆயிரம் பேரை உயிரிழக்க செய்த இந்த கொடிய வகை கொரோனா வைரசுக்கு இன்னும் முறையான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால், அதிக அளவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. கொரோனா வைரஸ்கான தடுப்பூசிகளை கண்டுபிடிப்பதில் பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன. தமிழகத்தில் நேற்று வரை சுமார் 17 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

தமிழகத்தில் மேலும் 817பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு 18,545 ஆக உயர்வு!!

இந்நிலையில் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 817பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 18,545 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 558 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இன்று புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களில் 508 பேர் ஆண்கள், 309 பேர் பெண்கள். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 567 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 9,909 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 133 ஆகஅதிகரித்துள்ளது. கொரோனா பரிசோதனைக்கு தமிழகத்தில் 70ஆய்வகங்கள் உள்ளன. இன்று மட்டும் 11, 231பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதையடுத்து இதுவரை பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,23,018ஆக அதிகரித்துள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.” என குறிப்பிடப்பட்டுள்ளது.