தமிழகத்தில் குறையாத கொரோனா! இன்று ஒரே நாளில் 5,986 பேருக்கு தொற்று உறுதி

 

தமிழகத்தில் குறையாத கொரோனா! இன்று ஒரே நாளில் 5,986 பேருக்கு தொற்று உறுதி

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் இரண்டு கோடியே 24 லட்சமாக அதிகரித்துள்ளது. 7 லட்சத்து 88 ஆயிரம் பேரை உயிரிழக்க செய்த இந்த கொடிய வகை கொரோனா வைரசுக்கு இன்னும் முறையான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால், அதிக அளவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. கொரோனா வைரஸ்கான தடுப்பூசிகளை கண்டுபிடிப்பதில் பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன.

தமிழகத்தில் குறையாத கொரோனா! இன்று ஒரே நாளில் 5,986 பேருக்கு தொற்று உறுதி

இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 5,986 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,61,435 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 75,076 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் பரிசோதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 39,88,599 ஆக அதிகரித்துள்ளது. இன்று பாதிக்கப்பட்டவர்களில் 3,629 பேர் ஆண்கள், 2,357 பேர் பெண்கள். 139 பரிசோதனை மையங்கள் தமிழகத்தில் உள்ளன. இன்று மட்டும் 116 பேர் உயிரிழந்தனர். 44பேர் தனியார் மருத்துவமனையிலும், 72 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,239 ஆக அதிகரித்துள்ளது. இன்று 5,742 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,01,913 ஆக அதிகரித்துள்ளது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.