ஒரே நாளில் 646 பேருக்கு கொரோனா பாதிப்பு! 9பேர் உயிரிழப்பு
உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 56லட்சத்து 14ஆயிரமாக அதிகரித்துள்ளது. 3லட்சத்து 48ஆயிரம் பேரை உயிரிழக்க செய்த இந்த கொடிய வகை கொரோனா வைரசுக்கு இன்னும் முறையான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால், அதிக அளவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. கொரோனா வைரஸ்கான தடுப்பூசிகளை கண்டுபிடிப்பதில் பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன. தமிழகத்தில் நேற்று வரை சுமார் 15 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் “வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 646 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17,728ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 611 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 9,342 பேர் கொரோனா வைரஸிலிருந்து மீண்டுள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 9 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 127ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பரிசோதனைக்கு தமிழகத்தில் 68ஆய்வகங்கள் உள்ளன. இன்று மட்டும் 10,289பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதையடுத்து இதுவரை பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,31,357ஆக அதிகரித்துள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.