தமிழகத்தில் இன்று 30,621 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; 297 பேர் உயிரிழப்பு

 

தமிழகத்தில் இன்று 30,621 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; 297 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 2கோடியே 37லட்சத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. 2 லட்சத்து 58 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை உயிரிழக்க செய்துள்ளது இந்த கொடிய வகை வைரஸ்.

தமிழகத்தில் இன்று 30,621 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; 297 பேர் உயிரிழப்பு

இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 30,608பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14லட்சத்து 99ஆயிரத்து 45ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 1,83,772ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 267பரிசோதனை மையங்கள் உள்ளன. இன்று பாதிக்கப்பட்டவர்களில் 17,532பேர் ஆண்கள், 13,089பேர் பெண்கள். சென்னையில் ஒரேநாளில் 6,991பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று 30,621 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; 297 பேர் உயிரிழப்பு

இன்று 297 பேர் உயிரிழந்துள்ளார். 109பேர் தனியார் மருத்துவமனையிலும், 188 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16,768ஆக அதிகரித்துள்ளது. இன்று 19,287பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12,98,945ஆக அதிகரித்துள்ளது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.