கணிசமாக குறைந்த கொரோனா உயிரிழப்பு… மாவட்ட வாரியான ரிப்போர்ட்!!

 

கணிசமாக குறைந்த கொரோனா உயிரிழப்பு… மாவட்ட வாரியான ரிப்போர்ட்!!

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இன்று புதிதாக 5,684 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,74,940 ஆக அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலானோர் கோயம்பேடு சந்தைக்கு சென்றுவிட்டு பல்வேறு மாவட்டங்களுக்கு பயணித்தவர்கள் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் விவரத்தை மாவட்டரீதியாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அதில் சென்னையிலேயே கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.

கணிசமாக குறைந்த கொரோனா உயிரிழப்பு… மாவட்ட வாரியான ரிப்போர்ட்!!

சென்னையில் ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 602பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கோவையில் 19,948 பேருக்கும், திண்டுக்கல்லில் 7,501 பேருக்கும் திருநெல்வேலியில் 10,523 பேருக்கும், ஈரோட்டில் 4,082 திருச்சியில் 8,336 பேருக்கும், நாமக்கல் 2,795 மற்றும் ராணிப்பேட்டை 11,567, செங்கல்பட்டு 28,994, மதுரை 14,988, கரூர் 1,948, தேனி 13,338 மற்றும் திருவள்ளூரில் 26,841பேருக்கு, தூத்துக்குடியில் 11,894, விழுப்புரத்தில் 8,660 பேருக்கும், கிருஷ்ணகிரியில் 2,715 பேருக்கும், திருவண்ணாமலையில் 12,211, தருமபுரியில் 1,560 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கணிசமாக குறைந்த கொரோனா உயிரிழப்பு… மாவட்ட வாரியான ரிப்போர்ட்!!

இதேபோல் திருப்பூரில் 3,792, கடலூர் 14,865, மற்றும் சேலத்தில் 13,005, திருவாரூரில் 4,560, நாகப்பட்டினம் 3,413 திருப்பத்தூர் 3,339, கன்னியாகுமரியில் 10,404 மற்றும் காஞ்சிபுரத்தில் 18,628 பேருக்கும், சிவகங்கை 4,345 மற்றும் வேலூரில் 11,949 பேருக்கும், நீலகிரியில் 1,989 பேருக்கும், தென்காசி 5,959, கள்ளக்குறிச்சியில் 7,292 பேருக்கும், தஞ்சையில் 7,691, விருதுநகரில் 13,458, ராமநாதபுரத்தில் 5,039 பேருக்கும், அரியலூர் 3,148 மற்றும் பெரம்பலூரில் 1,446 பேருக்கும், புதுக்கோட்டையில் 6,886 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்த 2,229 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.