கொரோனாவால் பாதிக்கப்படுவோரை விட டிஸ்சார்ஜ் செய்யப்படுவோர் எண்ணிக்கை அதிகம்! மாவட்ட வாரியான ரிப்போர்ட்

 

கொரோனாவால் பாதிக்கப்படுவோரை விட டிஸ்சார்ஜ் செய்யப்படுவோர் எண்ணிக்கை அதிகம்! மாவட்ட வாரியான ரிப்போர்ட்

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இன்று புதிதாக 5,519 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,91,571 ஆக அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலானோர் கோயம்பேடு சந்தைக்கு சென்றுவிட்டு பல்வேறு மாவட்டங்களுக்கு பயணித்தவர்கள் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் விவரத்தை மாவட்டரீதியாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அதில் சென்னையிலேயே கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்படுவோரை விட டிஸ்சார்ஜ் செய்யப்படுவோர் எண்ணிக்கை அதிகம்! மாவட்ட வாரியான ரிப்போர்ட்

சென்னையில் ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 593 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கோவையில் 21,233 பேருக்கும், திண்டுக்கல்லில் 7,728 பேருக்கும் திருநெல்வேலியில் 10,774 பேருக்கும், ஈரோட்டில் 4,275 திருச்சியில் 8,680 பேருக்கும், நாமக்கல் 3,118 மற்றும் ராணிப்பேட்டை 13,888, செங்கல்பட்டு 29,804, மதுரை 15,169, கரூர் 2,080, தேனி 13,605 மற்றும் திருவள்ளூரில் 27,728 பேருக்கு, தூத்துக்குடியில் 12,167 விழுப்புரத்தில் 9,151 பேருக்கும், கிருஷ்ணகிரியில் 2,955 பேருக்கும், திருவண்ணாமலையில் 12,738, தருமபுரியில் 1,892 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்படுவோரை விட டிஸ்சார்ஜ் செய்யப்படுவோர் எண்ணிக்கை அதிகம்! மாவட்ட வாரியான ரிப்போர்ட்

இதேபோல் திருப்பூரில் 4,190, கடலூர் 15,762, மற்றும் சேலத்தில் 13,888 திருவாரூரில் 4,975, நாகப்பட்டினம் 3,764 திருப்பத்தூர் 3,590, கன்னியாகுமரியில் 10,738 மற்றும் காஞ்சிபுரத்தில் 19,099 பேருக்கும், சிவகங்கை 4,424 மற்றும் வேலூரில் 12,416 பேருக்கும், நீலகிரியில் 2,218 பேருக்கும், தென்காசி 6,142, கள்ளக்குறிச்சியில் 7,668 பேருக்கும், தஞ்சையில் 8,051, விருதுநகரில் 13,607, ராமநாதபுரத்தில் 5,142 பேருக்கும், அரியலூர் 3,246 மற்றும் பெரம்பலூரில் 1,504 பேருக்கும், புதுக்கோட்டையில் 7,214 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்த 2,232 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.