கொரோனாவால்தான் இறந்தாரா? உயிரிழந்தவரின் உடலை தோண்டி எடுத்து உடற்கூறு ஆய்வு!

 

கொரோனாவால்தான் இறந்தாரா? உயிரிழந்தவரின் உடலை தோண்டி எடுத்து உடற்கூறு ஆய்வு!

கொரோனா பாதிப்பில் இறந்ததாக கூறப்பட்ட நகைக்கடை உரிமையாளரின் சாவில் மர்மம் இருப்பதாக குடும்பத்தார்கள் கோரிக்கை வைத்ததை அடுத்து இறந்தவரின் உடல் உடற்கூறு ஆய்வு செய்வதற்காக தோண்டி எடுக்கப்பட்டு வருகிறது.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் சலீம். இவர் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் 29ஆம் தேதி கொரோனா தொற்று பாதித்து இறந்துவிட்டதாக தஞ்சை தனியார் மருத்துவமனை நிர்வாகம் கூறி அவரது உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தது.

கொரோனாவால்தான் இறந்தாரா? உயிரிழந்தவரின் உடலை தோண்டி எடுத்து உடற்கூறு ஆய்வு!

இந்நிலையில் சலீமின் குடும்பத்தினர் இறந்த சலீமின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் எனவே அவரது உடலை தோண்டி எடுத்து உடற்கூறு ஆய்வு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர், சார் ஆட்சியர், ஆகியோரிடத்தில் கோரிக்கை மனு அளித்தனர். இதனையடுத்து இன்று இறந்த சலீமின் உடலை தோண்டி எடுத்து உடற்கூறு ஆய்வு செய்ய மாவட்ட நிர்வாகம் முடிவு எடுத்து பட்டுக்கோட்டை வட்டாட்சியர் தரணிகா முன்னிலையில் சலீமின் உடலை உடற்கூறு ஆய்வு செய்வதற்காக தோண்டி எடுக்கப்பட்டது. இதற்காக பட்டுக்கோட்டை டிஎஸ்பி புகழேந்தி கணேஷ் தலைமையில் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவர் சரவணன் தலைமையிலான மருத்துவக் குழு இறந்தவரின் உடலை உடற்கூறு ஆய்வு செய்தனர்.

பிரேத பரிசோதனையின் போது அவரது மனைவி சர்மிளா மற்றும் மருத்துவர்கள் காவல்துறையினர் சுகாதாரத்துறை ஊழியர்கள் கொரோனா பாதுகாப்பு உடை அணிந்து இருந்தனர். சலீமின் உடல்தான் என்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து நான்கு மணி நேரம் சட்டம் சார்ந்த மருத்துவர் சரவணன் முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவு இரண்டு நாட்களுக்குப் பிறகு சலீமின் உறவினர்களிடம் வழங்கப்படும்