விமான நிலையத்தில் செல்லாமல்போன அரசு கொரோனா பரிசோதனை சான்றிதழ் செல்லாது!

 

விமான நிலையத்தில் செல்லாமல்போன அரசு கொரோனா பரிசோதனை சான்றிதழ் செல்லாது!

மதுரை விமான நிலையத்தில் அரசு கொரோனா பரிசோதனை சான்றிதழ் செல்லாது எனக்கூறிய தனியார் விமான ஊழியர்களுடன் துபாய் செல்லும் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை விமான நிலையத்திலிருந்து தனியார் விமானம் இன்று காலை 9:15 மணிக்கு துபாய் சென்றது. இந்த விமானத்தில் பயணம் செய்வதற்காக சென்னை, கோயமுத்தூர், ராமநாடு, காரைக்குடி, தேவகோட்டை ஆகிய பகுதிகளிலிருந்த பயணிகள் பலர் அதிகாலை முதல் மதுரை விமான நிலையத்தில் காத்திருந்தனர்.

விமான நிலையத்தில் செல்லாமல்போன அரசு கொரோனா பரிசோதனை சான்றிதழ் செல்லாது!

இந்த நிலையில் குடியேற்றத்துறை சோதனைகள் முடிந்து விமானத்திற்கு செல்லும் முன்பு 10-க்கு மேற்பட்ட பயணிகளின் கொரோனா பரிசோதனை செல்லாது எனக்கூறி விமானத்தில் ஏற்றுவதற்கு விமான நிலைய ஊழியர்கள் மறுத்துள்ளனர். இதனால் விமான நிலைய ஊழியர்கள் உடன் பயணிகள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.