“எம்ஜிஆர், ஜெயலலிதாவால் கூட முடியலையாம்… வரலாற்றை மாற்றி எழுதிய எடப்பாடி!”
Feb 27, 2021, 15:36 IST1614420410000
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான அறிவிப்புகள் நேற்று வெளியிடப்பட்டன. அதன்படி ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த அறிவிப்பு வெளியான இரு மணி நேரங்களிலிருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலாவதாகவும் அறிவிக்கப்பட்டது. இச்சூழலில் பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாள், அதாவது அதிமுக அரசின் கடைசி நாளான இன்று சட்டப்பேரவையில் நடைபெற்றது.
அப்போது பேசிய அவைத்தலைவர் தனபால், “2016ஆம் ஆண்டு முதல் இன்று வரை பேரவை 167 நாட்கள் கூடியுள்ளது. மொத்தன் 858 மணி நேரம் 12 நிமிடங்கள் நடைபெற்றுள்ளது. அவையில் உரையாற்ற ஆளுங்கட்சியைக் காட்டிலும் எதிர்க்கட்சிக்கு 16 மணி நேரம் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. அதேபோல சட்டப்பேரவை வரலாற்றிலேயே அனைத்து நாட்களும் தவறாது பங்கேற்ற ஒரே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான்” என்று புகழாரம் சூட்டினார்.