“7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கியதில் பெருமை கொள்கிறேன்” – முதலமைச்சர்

 

“7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கியதில் பெருமை கொள்கிறேன்” – முதலமைச்சர்

கோவை

மருத்துவப்படிப்பில், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கியதற்கு பெருமை கொள்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். இதுதொடர்பாக கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர், நாட்டிலேயே நீட் தேர்வை எதிர்க்கும் ஒரே மாநிலம் தமிழகம் தான் என்று குறிப்பிட்டார். மேலும், நீட் தேர்வால் அரசுப்பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதால் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டதாகவும், அதனால் இன்று 313 பேர் மருத்துவ படிப்பில் சேர்ந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

“7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கியதில் பெருமை கொள்கிறேன்” – முதலமைச்சர்

மேலும், தமிழகத்தில் 12ஆம் வகுப்பு தேர்வெழுதிய 8.14 லட்சம் மாணவர்களில் 41 சதவீதம் பேர் அரசுப்பள்ளி மாணவர்கள் என்றும், இதில் 6 பேருக்கு மட்டுமே இடம் கிடைக்கும் சூழல் இருந்ததாகவும் தெரிவித்த முதலமைச்சர், தான் கிராமத்தில் படித்து வந்தவன் என்பதால், அரசுப்பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுவதை அறிந்து உள்ஒதுக்கீடு வழங்கியதாகவும், இதற்காக பெருமை கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்