“அதை ஏத்துக்கிட்டா இதையும் ஏத்துக்கோங்க” – திமுகவுக்கு லாக் போடும் அண்ணாமலை!

 

“அதை ஏத்துக்கிட்டா இதையும் ஏத்துக்கோங்க” – திமுகவுக்கு லாக் போடும் அண்ணாமலை!

சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலை நினைவுதினத்தையொட்டி ஈரோடு அறச்சலூர் ஓடாநிலையில் அவரின் உருவப்படத்துக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மரியாதை செலுத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “1967ஆம் ஆண்டுக்குப் பிறகு வந்த அரசுகள், பாடப்புத்தகங்களில், சுதந்திரத்துக்காகப் போராடிய தமிழக தலைவர்களையும், தியாகிகளையும் மறைத்து வந்துள்ளன. அவர்களை நாங்கள் வெளிப்படுத்தி, போற்றி வருகிறோம்.

“அதை ஏத்துக்கிட்டா இதையும் ஏத்துக்கோங்க” – திமுகவுக்கு லாக் போடும் அண்ணாமலை!

கீழடி அகழாய்வை பாஜக வரவேற்கிறது. கீழடி என்பது ஒருவருக்கு மட்டும் சொந்தமானது அல்ல. கீழடி ஆய்வு முடிவுகளை ஏற்கும் ஆட்சியாளர்கள், கடவுளைப் பற்றி பாடிய சங்க இலக்கியங்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். பாடத்திட்ட மறு ஆய்வு நடந்தபின்னர், 2020ஆம் ஆண்டு நடந்த நீட் தேர்வை எந்த விதத்தில் ஆய்வு செய்து பார்த்தாலும், சமூகநீதியைத் தாண்டி நீட் வெற்றி பெற்றுள்ளது. எல்லா சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.

“அதை ஏத்துக்கிட்டா இதையும் ஏத்துக்கோங்க” – திமுகவுக்கு லாக் போடும் அண்ணாமலை!

ஏ.கே. ராஜன் குழுவினர் குறிப்பிட்ட ஆண்டுகளின் தகவல்களை மட்டும் எடுத்துக் கொண்டு, நீட் தேர்வுக்கு எதிரான கருத்துக்களைக் கூறுகின்றனர். நீட் தேர்வுக்காக நன்றாகப் படித்துக் கொண்டிருந்த மாணவர்களை, நீட் வராது, படிக்காதீர்கள் என்று தேர்தலுக்காகக் கூறிவிட்டு, தற்போது 3 மாதத்தில் நீட் தேர்வுக்கு தயாராகுமாறு மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார். மத்திய அமைச்சர்களைச் சந்தித்த பின்னர், மேகதாது அணை கட்டப்படாது என அமைச்சர் துரைமுருகன் தெளிவுபடுத்தியிருக்கிறார். தமிழகத்தின் மீதும், மக்கள் மீதும் பிரதமர் மிகுந்த அக்கறை கொண்டுள்ளார். தமிழகத்தின் எந்த உரிமையையும் மத்திய அரசு பறிக்கவில்லை” என்றார்.