கட்சியை காட்டிலும் பாசம்தான் பெரிது… என் மகன் சுவேந்துவை ஆதரிப்பேன்… திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சிசிர் ஆதிகாரி

 

கட்சியை காட்டிலும் பாசம்தான் பெரிது… என் மகன் சுவேந்துவை ஆதரிப்பேன்… திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சிசிர் ஆதிகாரி

நந்திகிராம் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக போட்டியிடும் தனது மகன் சுவேந்து ஆதிகாரியை ஆதரிப்பேன் என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சிசிர் ஆதிகாரி தெரிவித்தார்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் செல்வாக்கு மிக்க தலைவராக இருந்தவர் சுவேந்து ஆதிகாரி. கட்சி தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த டிசம்பரில் திரிணாமுல் காங்கிரசிலிருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தார். அதேசமயம் சுவேந்து அதிகாரியின் தந்தையும், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யுமான சிசிர் ஆதிகாரி தொடர்ந்து மம்தா கட்சியில் இருந்து வருகிறார்.

கட்சியை காட்டிலும் பாசம்தான் பெரிது… என் மகன் சுவேந்துவை ஆதரிப்பேன்… திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சிசிர் ஆதிகாரி
சுவேந்து ஆதிகாரி

எதிர்வரும் மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக சுவேந்து ஆதிகாரி போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் தலைவியும், அம்மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார். இந்த சூழ்நிலையில், தனது மகன் சுவேந்து ஆதிகாரியை ஆதரிப்பேன் என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சிசிர் ஆதிகாரி அதிரடியாக அறிவித்துள்ளார்.

கட்சியை காட்டிலும் பாசம்தான் பெரிது… என் மகன் சுவேந்துவை ஆதரிப்பேன்… திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சிசிர் ஆதிகாரி
பிரசார கூட்டத்தில் மோடி (கோப்புப்படம்)

சிசிர் ஆதிகாரி செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், நான் என் மகனை ஆதரிப்பேன். மார்ச் 20ம் தேதி காந்தியில் நடைபெறும் பிரதமர் மோடியின் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு என் மகன் சுவேந்து ஆதிகாரி என்னிடம் சொன்னால், நான் நிச்சயமாக அந்த கூட்டத்துக்கு செல்வேன் என தெரிவித்தார். சிசிர் ஆதிகாரியும் பா.ஜ.கவில் இணைவார் என்று பேசப்படுகிறது.