பாஜகவில் ரவுடிகள் இணைவதால் எல் முருகனும் அடாவடியாக இருக்கிறார்: டி.கே.எஸ் இளங்கோவன்

 

பாஜகவில் ரவுடிகள் இணைவதால் எல் முருகனும் அடாவடியாக இருக்கிறார்: டி.கே.எஸ் இளங்கோவன்

சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன், “திமுக தலைவர் ஸ்டாலின் வெளியில் நடமாட முடியாது என பா.ஜ.க தலைவர் பேசுவது அதிகார திமிரை காட்டுகிறது. ஒரு வேலை பா.ஜ.க வில் ரவுடிகள் பலர் இணைவதால் இப்படி பேசுகிறாரோ என தோன்றுகிறது.

பாஜகவில் ரவுடிகள் இணைவதால் எல் முருகனும் அடாவடியாக இருக்கிறார்: டி.கே.எஸ் இளங்கோவன்

பெண்கள் குறித்து பா.ஜ.க நிர்வாகி எஸ்.வி. சேகர் இழிவாக பேசியதற்கு என்ன நடவடிக்கையை அவர்கள் எடுத்தார்கள் மனு தர்மம் நூலில் இருப்பதை தானே திருமாவளவன் குறிப்பிட்டார். அதில் இருக்கும் விஷயத்தை ஏன் தற்போது வரை பேச தயங்குகின்றனர். பா.ஜ.க செய்யும் இதுபோன்ற விஷயம் இன்னும் திராவிட இயக்கத்துக்கு வளர்ச்சி தான். என்ன நினைத்தாலும் பா.ஜ.க வரும் தேர்தலில் காலூன்ற முடியாது. தமிழக அரசு இதுபோன்ற விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் என்பது தான் உண்மை” எனக் கூறினார்.