கீழ்பென்னாத்தூரில் உரிய ஆவணமில்லாத ரூ.1.66 லட்சம் பறிமுதல்!

 

கீழ்பென்னாத்தூரில் உரிய ஆவணமில்லாத ரூ.1.66 லட்சம் பறிமுதல்!

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருகே உரிய ஆவணமின்றி வாகனத்தில் எடுத்துச்சென்ற 1 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் இன்று பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த வாகனத்தை மறித்து சோதனையிட்டனர். இதில் வாகனத்தில் 1 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய் பணம் எடுத்துச் சென்றது தெரியவந்தது.

கீழ்பென்னாத்தூரில் உரிய ஆவணமில்லாத ரூ.1.66 லட்சம் பறிமுதல்!

இதுகுறித்து, வாகன ஓட்டியிடம் விசாரித்தபோது, அவர் கீழ்பென்னாத்தூர் பகுதியை சேர்ந்த பைனான்சியர் ராமசாமி என்பது தெரியவந்தது. மேலும், எடுத்துச் சென்ற பணத்திற்கு அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாததும் தெரியவந்தது. இதனால், அவரிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், அதனை கீழ பென்னாத்தூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கண்ணப்பனிடம் ஒப்படைத்தனர்.