அருணாச்சலேஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.71 லட்சம் வசூல்!

 

அருணாச்சலேஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.71 லட்சம் வசூல்!

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.71 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் 171 கிராம் தங்கம் வசூலானது.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயம், சிவனின் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கி வருகிறது. இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்து செல்வர்.

அருணாச்சலேஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.71 லட்சம் வசூல்!

அப்பேது பக்தர்கள் செலுத்தும் காணிக்கையானது மாதந்தோறும் எண்ணப்பட்டு வருகிறது. அதன்படி மார்ச் மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. கோயில் இணை ஆணையர் ஞானசேகரன் தலைமையில் நடந்த காணிக்கை எண்ணும் பணியில், கோயில் ஊழியர்கள், பக்தர்கள், தன்னார்வலர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதில் மார்ச் மாத உண்டியல் காணிக்கையாக 71 லட்சத்து, 6 ஆயிரத்து 337 ரூபாய் ரொக்கப்பணம் வசூலானது. மேலும், 171 தங்கம் மற்றும் 393 கிராம் வெள்ளியும் காணிக்கையாக கிடைக்க பெற்றது.