திமுக நிர்வாகிகள் இருவருக்கு சரமாரி கத்திக்குத்து – மருத்துவமனையில் அனுமதி

 

திமுக நிர்வாகிகள் இருவருக்கு சரமாரி கத்திக்குத்து – மருத்துவமனையில் அனுமதி

திருவள்ளூர்

திருத்தணியில் நேற்றிரவு மர்மநபர்கள் நடத்திய கொலைவெறி தாக்குதலில், திமுக நிர்வாகிகள் இருவர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை சேர்ந்தவர் ஷாம்சுந்தர்.

திமுக நிர்வாகிகள் இருவருக்கு சரமாரி கத்திக்குத்து – மருத்துவமனையில் அனுமதி

இவர் திமுக நகர பொருளாளராக இருந்து வருகிறார். இவர் நேற்றிரவு அதேபகுதியை திமுக இளைஞரணி நிர்வாகி கிரண் என்பவருடன், அரக்கோணம் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே நின்று பேசிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது, அங்கு கத்தியுடன் வந்த 3 மர்மநபர்கள் இருவரையும் சரமாரியாக வெட்டியுள்ளனர்.

திமுக நிர்வாகிகள் இருவருக்கு சரமாரி கத்திக்குத்து – மருத்துவமனையில் அனுமதி

இதில், கிரண் மற்றும் ஷாம்சுந்தர் படுகாயமடைந்த நிலையில், அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் இருவரையும் மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனையடுத்து, தாக்குதல் சம்பவம் குறித்து நேரில் விசாரணை நடத்திய திருத்தணி டிஎஸ்பி குணசேகரன், அந்த பகுதியில் இருந்த சிசிடிவி பதிவுகளையும் ஆய்வுசெய்தார்.

திமுக நிர்வாகிகள் இருவருக்கு சரமாரி கத்திக்குத்து – மருத்துவமனையில் அனுமதி

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய நபர்களை தேடி வருகின்றனர். இதனிடையே சம்பத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவர், திருத்தணியை அடித்த டி.புதூர் கிராமத்தை சேர்ந்த நிர்மல்குமார் என்பது தெரியவந்துள்ளது.

திமுக நிர்வாகிகள் இருவருக்கு சரமாரி கத்திக்குத்து – மருத்துவமனையில் அனுமதி

கொலை முயற்சியின் போது அவரது கையிலும் பலத்தகாயம் ஏற்பட்டதாகவும், அவரை மேல் சிகிச்சைக்காக அரகோணத்தில் இருந்து மருத்துவர்கள் சென்னைக்கு அனுப்பி வைத்தாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.