திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் வேகமாக பரவும் கொரோனா : தி. மலையில் 6 ஆயிரத்தை தாண்டிய தொற்று!

 

திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் வேகமாக பரவும் கொரோனா : தி. மலையில் 6 ஆயிரத்தை தாண்டிய தொற்று!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 6,426 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,34,114  ஆக அதிகரித்துள்ளது.

திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் வேகமாக பரவும் கொரோனா : தி. மலையில் 6 ஆயிரத்தை தாண்டிய தொற்று!

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,659 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் 97,575 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இருப்பினும் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொற்று அதிகரித்துள்ளது. இருப்பினும் தமிழகம் முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு நாளையுடன் முடிவடைகிறது.

திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் வேகமாக பரவும் கொரோனா : தி. மலையில் 6 ஆயிரத்தை தாண்டிய தொற்று!

இந்நிலையில் திருவள்ளூரில் மேலும் 343 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் அங்கு மொத்த பாதிப்பு 13,527 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் காஞ்சிபுரத்தில் 176 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் அங்கு தொற்று எண்ணிக்கை 8,598 ஆக உயர்ந்துள்ளது.

திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் வேகமாக பரவும் கொரோனா : தி. மலையில் 6 ஆயிரத்தை தாண்டிய தொற்று!

அத்துடன் திருவண்ணாமலையில் மேலும் 188 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் அங்கு மொத்த பாதிப்பு 6,011 ஆக அதிகரித்துள்ளது. இதனால் அங்கு தொற்று பாதிப்பு 6 ஆயிரத்தை கடந்துள்ளது.