மீண்டும் வேகமாக பரவும் கொரோனா : திருவள்ளூரில் மேலும் 338 பேர் பாதிப்பு!

 

மீண்டும் வேகமாக பரவும் கொரோனா : திருவள்ளூரில் மேலும் 338 பேர் பாதிப்பு!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 5,849 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,86,492 ஆக அதிகரித்துள்ளது.

மீண்டும் வேகமாக பரவும் கொரோனா : திருவள்ளூரில் மேலும் 338 பேர் பாதிப்பு!

நேற்று மட்டும் 74 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,700 ஆக அதிகரித்துள்ளது. இதனால் சென்னை உள்பட சில மாவட்டங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் 89,561 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இருப்பினும் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொற்று அதிகரித்துள்ளது.

மீண்டும் வேகமாக பரவும் கொரோனா : திருவள்ளூரில் மேலும் 338 பேர் பாதிப்பு!

இந்நிலையில் திருவள்ளூரில் மேலும் நண்பகல் வரை புதிதாக 338 கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 10, 548 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மீஞ்சூரில் 46, கடம்பத்தூர் 36, சோழவரத்தில் 25, பூண்டியில் 22 பேர் என கொரோனா தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது