திருவள்ளூரில் இன்று ஒரேநாளில் 358 பேருக்கு கொரோனா : மொத்த பாதிப்பு 8505 ஆக உயர்வு!
Jul 17, 2020, 14:03 IST1594974804000
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 4,549 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,56,369 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் மற்ற மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 358 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 8505 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக ஆவடி -120, திருவள்ளூர் -21, சோழவரம் -20 ஆக கொரோனா தொற்று பதிவாகியுள்ளது.