எஸ்பிபி உடலுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் மரியாதை!
Sep 26, 2020, 08:09 IST1601087978000
மறைந்த எஸ்பிபி உடலுக்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி நேரில் மரியாதை செலுத்தினார்.
உடல்நல குறைவால் மறைந்த எஸ்பிபி உடல் திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது. இதனிடையே சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டஉடலுக்கு பொதுமக்களும், திரை பிரபலங்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் எஸ்பிபி உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ள பண்ணை வீட்டில் பொதுமக்கள் இன்னும் அனுமதிக்கப்படாத நிலையில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி நேரில் வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் முடிந்த பிறகு காலை 10 மணியளவில் அடக்கம் செய்யப்பட வேண்டிய பணிகள் துவங்கி 11 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படும் என கூறப்படுகிறது.