திருவள்ளூர்: மேம்பால பணிகளை ஆய்வுசெய்த ஆட்சியர் பொன்னையா
Nov 6, 2020, 22:10 IST1604680833000
திருவள்ளூர் அருகே சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் நாராயணபுரம் பகுதியில் நடைபெற்று வரும் மேம்பால பணிகளை மாவட்ட ஆட்சியர் பொன்னையா இன்று ஆய்வுசெய்தார்.
சுமார் 17 கோடியே 69 லட்சம் ரூபாய் மதிப்பிலான இந்த மேம்பால பணிகள் பொதுமுடக்கம் காரணமாக தாமதமாகி வந்த நிலையில் இன்று ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் பொன்னையா, கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்ததாருக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் பொன்னையா, வரும் ஜனவரி மாதத்திற்குள் மேம்பால பணிகள் நிறைவடைந்து, மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவித்தார்.