திருவள்ளூரில் 7 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா : ராமநாதபுரத்திலும் வேகமெடுக்கும் கொரோனா பரவல்!

 

திருவள்ளூரில் 7 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா : ராமநாதபுரத்திலும் வேகமெடுக்கும் கொரோனா பரவல்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 4,244 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,38,470 ஆக அதிகரித்துள்ளது.

திருவள்ளூரில் 7 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா : ராமநாதபுரத்திலும் வேகமெடுக்கும் கொரோனா பரவல்!

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 325 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது இதனால் அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,980ஆக உயர்ந்துள்ளது.

திருவள்ளூரில் 7 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா : ராமநாதபுரத்திலும் வேகமெடுக்கும் கொரோனா பரவல்!

அதேபோல் ராமநாதபுரம் மாவட்டத்தில் மேலும் 86 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் ராமநாதபுரத்தில் பாதிப்பு எண்ணிக்கை 1,935ஆக அதிகரித்துள்ளது.

முன்னதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் இன்று ஒரு நாள் மட்டும் மூடப்படுவதாகவும் ஊழியர்கள் இன்று வர வேண்டாம் என்றும் ஆட்சியர் மகேஸ்வரி அறிவித்துள்ளார். மேலும், கிருமிநாசினி தெளிப்பு பணி நேற்று நடந்ததால் இன்று அலுவலகம் மூடப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.