திருவள்ளூரில் 13 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு !

 

திருவள்ளூரில் 13 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு !

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 6,972பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,27,688 ஆக அதிகரித்துள்ளது.

திருவள்ளூரில் 13 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு !

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,659 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் 96,438 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இருப்பினும் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொற்று அதிகரித்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதூம் ஊரடங்கு அமலில் உள்ளது.

திருவள்ளூரில் 13 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு !

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 396 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13,202 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் புதுக்கோட்டையில் மேலும் 72 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு 1,916 எண்ணிக்கை ஆக உயர்ந்துள்ளது.