14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – உதவி செயற்பொறியாளர் கைது

 

14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – உதவி செயற்பொறியாளர் கைது

திருவள்ளூர்

திருவள்ளூர் அருகே 14 வயது சிறுமியிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட முயன்ற மின்வாரிய உதவி செயற்பொறியாளரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைதுசெய்தனர். திருவள்ளூர் மாவட்டம் மேல்மணம்பேடு கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமியிடம், மர்மநபர் ஒருவர் 500 ரூபாய் பணத்தை காண்பித்து பாலியலில் ஈடுபட அழைத்ததாக பெற்றோர் புகார்

14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – உதவி செயற்பொறியாளர் கைது

தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர். அதில், சிறுமியிடம் பாலியல் வன்முறை செய்ய முயன்ற நபர் மின்சார வாரியத்தில் உதவி செயற்பொறியாளராக பணியாற்றி வரும் சுரேஷ் என்பது தெரியவந்தது. மேலும், பணி காரணமாக மேல்மணம்பேட்டில் வாடகை வீட்டில் வசித்து வந்த அவர், மதுபோதையில் வீட்டின் அருகே விளையாடிய சிறுமியிடம் தவறாக நடந்துகொள்ள முயன்றதும் தெரியவந்தது. இதனையடுத்து, சுரேஷை போக்சோ சட்டத்தில் கைதுசெய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.