இருசக்கர வாகனம் மீது வேன் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

 

இருசக்கர வாகனம் மீது வேன் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

திருப்பூர்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதிய விபத்தில் 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உடுமலை அடுத்த கள்ளிப்பாளையத்தை சேர்ந்தவர் பாலாஜி(20). இவர் அதேபகுதியை சேர்ந்த சிறுவர்கள் சுந்தரமூர்த்தி (16) மற்றும் சபரி(9) ஆகியோருடன் உடுமலையில் இருந்து இருசக்கர வாகனத்தில் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

இருசக்கர வாகனம் மீது வேன் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

அப்போது கோவை – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், கள்ளிப்பாளையம் பிரிவில் சாலையை கடக்கும்போது, எதிர்பாராத விதமாக எதிரே வந்த சீட்வேன் மீது மோதியது. இந்த விபத்தில் இருசக்கர வானத்தில் சென்ற 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இருசக்கர வாகனம் மீது வேன் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், மூவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

தொடர்ந்து விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.