திருப்பூர் அருகே ஆம்னி வேன் தீ பற்றி எரிந்ததில், ஒருவர் பலி!

 

திருப்பூர் அருகே ஆம்னி வேன் தீ பற்றி எரிந்ததில், ஒருவர் பலி!

திருப்பூர்

திருப்பூர் அருகே ஆம்னி வேன் தீப்பற்றி எரிந்த விபத்தில் ஒருவர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.

திருப்பூரை அடுத்த துடுப்பதி பகுதியை சேர்ந்தவர் ரங்கராஜன் (52). இவரது மனைவி ஜோதிமணி. கடந்த மாதம் விபத்தில் சிக்கிய ரங்கராஜன், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். உடல் நலமடைந்த நிலையில் நேற்றிரவு மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அவர், தனது மனைவியுடன் ஆம்னி வேனில் திருப்பூருக்கு திரும்பி கொண்டிருந்தார்.

திருப்பூர் அருகே ஆம்னி வேன் தீ பற்றி எரிந்ததில், ஒருவர் பலி!
REB IMAGE

ஆம்னி வேனை உறவினர் ராஜா என்பவர் ஓட்டிச்சென்றார். திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே வந்தபோது காரை நிறுத்திவிட்டு ராஜா, ஜோதிமணி ஆகியோர் இயற்கை உபாதையை கழிக்க சென்றுள்ளனர். பின்னர், இருவரும் காரில் ஏரி, காரை ஸ்டார்ட் செய்தபோது காரில் இருந்து திடீரென புகை வெளியேறி உள்ளது.சிறிது நேரத்தில் தீப்பற்றி எரிய தொடங்கியது. இதனால் காரில் ராஜா மற்றும் ஜோதிமணி ஆகியோர் உடனடியாக வெளியேறினர்.

மேலும், ரங்கராஜனை மீட்க முயன்றபோது தீ கார் முழுவதும் பரவியதால், அவர் காருக்குள்ளேயே சிக்கி உயிரிழந்தார். தகவல் அறிந்த பெருமாநல்லூர் போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து,ஜோதிமணி மற்றும் ராஜாவிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.