திருப்பூர்- போதையில் வீட்டு முன் படுத்துக் கிடந்தவர் கல்லால் அடித்துக்கொலை!

 

திருப்பூர்- போதையில் வீட்டு முன் படுத்துக் கிடந்தவர் கல்லால் அடித்துக்கொலை!

திருப்பூர்

மது போதையில் ஆடையின்றி வீட்டு முன் படுத்து கிடந்த நபரை, முன்விரோதத்தில் கல்லால் அடித்து கொலை செய்த சம்பவம் திருப்பூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர்- போதையில் வீட்டு முன் படுத்துக் கிடந்தவர் கல்லால் அடித்துக்கொலை!

திருப்பூர் கோல்டன் நகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (35). பெயிண்டிங் வேலை செய்துவரும் அவருக்கு, இன்னும் திருமணமாகாத நிலையில் தனது தாய் ஜெயந்தியுடன் வசித்து வருகிறார். அவருக்கும், பக்கத்தில் குடியிருக்கும் செல்வம் என்பவருக்கும் பெயிண்டிங் கான்ட்ராக்டுகளை பெறுவதில் தொழில் போட்டி, முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

திருப்பூர்- போதையில் வீட்டு முன் படுத்துக் கிடந்தவர் கல்லால் அடித்துக்கொலை!

இந்த நிலையில், ஜெயந்தி தனது மகளை காண நேற்று சென்னைக்கு சென்ற நிலையில், நேற்று இரவு சுரேஷ்குமார் மது அருந்தியுள்ளார். அப்போது, போதையில் பேன்ட் உள்ளிட்ட கீழ் ஆடைகள் இன்றி தனது வீட்டின் அருகே விழுந்து கிடந்துள்ளார்.

திருப்பூர்- போதையில் வீட்டு முன் படுத்துக் கிடந்தவர் கல்லால் அடித்துக்கொலை!

அதனை கண்ட செல்வம் சுரேஷ்குமாரை எச்சரித்து வீட்டுக்கு செல்ல அறிவுறுத்தியுள்ளார். மது போதையில் இருந்த சுரேஷ்குமார் செல்வத்தை கடுமையாக திட்டி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த செல்வம் அருகில் இருந்த கல்லை எடுத்து சுரேஷ்குமார் தலையில் போட்டு விட்டு தனது வீட்டிற்கு சென்று விட்டார்.

திருப்பூர்- போதையில் வீட்டு முன் படுத்துக் கிடந்தவர் கல்லால் அடித்துக்கொலை!

அதிகாலையில் சுரேஷ்குமார் ஆடைகள் இன்றி தலையில் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து,விரைந்து சென்ற போலீசார் சுரேஷ்குமாரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சுரேஷ்குமார் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து செல்வத்தை கைது செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.