திருப்பத்தூர் மாவட்ட தீயணைப்புத் துறை தலைமை அலுவலகம் திறப்பு

 

திருப்பத்தூர் மாவட்ட தீயணைப்புத் துறை தலைமை அலுவலகம் திறப்பு

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட தலைமை தீயணைப்புத்துறை அலுவலகத்தை, மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் இன்று தொடங்கி வைத்தார். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் இருந்து திருப்பத்தூர் 35-வது மாவட்டமாக பிரிக்கப்பட்டு சமீபத்தில் ஓராண்டு நிறைவடைந்தது. இதனையொட்டி, தீயணைப்பு துறைக்கான மாவட்ட அலுவலகம், வேலூரில் இருந்து பிரிக்கப்பட்டு இன்று திருப்பத்தூர் அவ்வைநகர் 4-வது தெருவில் உள்ள தனியார் கட்டிடத்தில் தொடங்கப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்ட தீயணைப்புத் துறை தலைமை அலுவலகம் திறப்பு

இதனையொட்டி நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் கலநதுகொண்டு, குத்துவிளக்கு ஏற்றி, தீயணைப்பு நிலையத்தை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட தீயணைப்பு அலுவலர் முரளி , ஏடிஎஃப்ஓ பழனி உள்ளிடட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.