வேல் யாத்திரைக்கு அனுமதி கோரி, ஆட்சியர் அலுவலகத்தில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்
Nov 6, 2020, 12:39 IST1604646594000
திருப்பத்தூர்
பாஜகவின் வேல் யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்ட 100-க்கும் மேற்பட்ட பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, வேல்
யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி வழங்க வலியுறுத்தி, வெற்றிவேல், வீரவேல் என கோஷங்களையும் எழுப்பினர். இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைதுசெய்த போலீசார், அவர்களை வாகனங்கள் மூலம் அழைத்துச்சென்று தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.