பாஜக பிரமுகர் மீது நடவடிக்கை கோரி விசிக ஆர்ப்பாட்டம்
Oct 24, 2020, 15:23 IST1603533210000
திருப்பத்தூர்
திருமாவளவன் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு கருத்து பதிவிட்ட பாஜக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, ஆம்பூர் காவல்நிலையம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் பாஜக பிரமுகர்
குட்டிசண்முகம். இவர், தனது முகநூல் பக்கத்தில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் குறித்து அவதூறாக கருத்து பதிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், குட்டிசண்முகத்தை கைதுசெய்ய வலியுறுத்தி ஆம்பூர் காவல்நிலையம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.