மணல் கடத்திய லாரி, ஜேசிபி இயந்திரம் பறிமுதல்-2 பேர் கைது
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே செம்மண் கடத்திய லாரி மற்றும் ஜே.சி.பி இயந்திரத்தை பறிமுதல் செய்த போலீசார் , இது தொடர்பாக இருவரை கைது செய்தனர்.
வாணியம்பாடி அடுத்த,வளையாம்பட்டு பகுதியில் பாலாற்றில் அனுமதியின்றி வாகனங்களில் செம்மண் வெட்டி கடத்தப்படுவதாக வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் வருவாய்துறையினர் சென்று சோதனை நடத்தினர். அப்போது, அங்கு செம்மண் ஏற்றி கொண்டு இருந்த லாரி மற்றும் செம்மண் வெட்ட பயன்படுத்தப்பட்ட ஜே.சி.பி இயந்திரம் பறிமுதல் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து வாணியம்பாடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து லாரி மற்றும் ஜே.சி.பி ஓட்டுனர்கள் அஜீத் மற்றும் அருண் ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில நாட்களாக மணல் கடத்தல் சம்பவங்கள் நடைபெறாத நிலையில், மீண்டும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது