வீட்டிற்குள் புகுந்த 9 அடி நீள மலைப்பாம்பு மீட்பு
Oct 30, 2020, 11:13 IST1604036614000
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே வீட்டிற்குள் புகுந்த 9 அடி நீளமுள்ள மலைப்பாம்பை, பொதுமக்கள் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
ஆம்பூர் அருகே அரங்கல் துருகம் ஊராட்சிக்குட்பட்ட பொன்னப்பள்ளி காப்புக்காடு பகுதியில் இருந்து வெளியேறிய சுமார் 9 அடி நீளமுள்ள மலை பாம்பு ஒன்று, வேணுகோபால் என்பவரது வீட்டிற்குள் புகுந்தது. இதனை பார்த்த வேணுகோபால் மற்றும் அவரது குடும்பத்தினர் கூச்சலிட்டனர். இதனையடுத்து அந்த பகுதியை சேர்ந்த பட்டாபி என்பவர் உதவியுடன், கிராமமக்கள் மலைப்பாம்பை பத்திரமாக பிடித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மலைப்பாம்பை மீட்டு அருகில் உள்ள காப்புக்கட்டில் விட்டனர்.