“பேரறிவாளனுக்கு காலவரையற்ற பரோல் தர வேண்டும்” – அற்புதம்மாள் கோரிக்கை

 

“பேரறிவாளனுக்கு காலவரையற்ற பரோல் தர வேண்டும்” – அற்புதம்மாள் கோரிக்கை

திருப்பத்தூர்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவானின் விடுதலைக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கும் வரை, அவருக்கு காலவரையற்ற பரோல் வழங்க வேண்டுமென தமிழக முதல்வருக்கு, பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கோரிக்கை விடுத்துள்ளார். இடுப்பு முறிவு காரணமாக சிகிச்சை பெற்று வரும்

“பேரறிவாளனுக்கு காலவரையற்ற பரோல் தர வேண்டும்” – அற்புதம்மாள் கோரிக்கை

தந்தையை கவனித்து கொள்வதற்காக, பேரறிவாளன் பரோலில் வெளிவந்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் தங்கியிருந்து பெற்றோரை கவனித்து வருகிறார். இந்நிலையில்,

“பேரறிவாளனுக்கு காலவரையற்ற பரோல் தர வேண்டும்” – அற்புதம்மாள் கோரிக்கை

மருத்துவப்படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, அற்புதம்மாள் நன்றி தெரிவித்துள்ளார். இதோபோன்று, தனது மகனின் விடுதலைக்கு, ஆளுநர் ஒப்புதல் அளிக்கும் வரை, பேரறிவாளனுக்கு

“பேரறிவாளனுக்கு காலவரையற்ற பரோல் தர வேண்டும்” – அற்புதம்மாள் கோரிக்கை

காலவரையற்ற பரோல் வழங்க வேண்டுமென அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், கணவர் இடுப்பு முறிந்து படுக்கையில் உள்ள நிலையில், மகனின் இருப்பு தங்களுக்கு அவசியமாவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.