கிராம நிர்வாக அலுவலர்களுக்கு லேப்டாப் வழங்கிய அமைச்சர் கே.சி.வீரமணி
Oct 25, 2020, 14:50 IST1603617627000
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு, மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி
கலந்துகொண்டு, முதற்கட்டமாக 103 மடிக்கணினிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சிவனருள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.