நாம் தமிழர் நிர்வாகியுடன் தகராறு – ஊராட்சி செயலர் சஸ்பெண்ட்

 

நாம் தமிழர் நிர்வாகியுடன் தகராறு – ஊராட்சி செயலர் சஸ்பெண்ட்

திருப்பத்தூர்

வாணியம்பாடி அருகே ஆழ்துளை கிணறு அமைப்பது தொடர்பாக நாம் தமிழர் கட்சியினருடன் தகராறில் ஈடுபட்ட ஊராட்சி செயலரை பணியிடை நீக்கம் செய்து,மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த நிம்மியம்பட்டு ஊராட்சியில் ஆழ்துளை கிணறு அமைப்பது தொடர்பாக நாம் தமிழர் கட்சி நிர்வாகிக்கும், ஊராட்சி செயலர் ஜீவஜோதி என்பருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ஊராட்சி செயலர் ஜீவஜோதியை பணியிடை நீக்கம் செய்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில் வட்டார வளர்ச்சி அலுவலர் துரை நடவடிக்கை மேற்கொண்டார்.