“ஆம்பூர் புறவழிச்சாலையில் விரைவில் மேம்பாலம்” – எம்.பி., கதிர்ஆனந்த்

 

“ஆம்பூர் புறவழிச்சாலையில் விரைவில் மேம்பாலம்” – எம்.பி., கதிர்ஆனந்த்

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு, தனியார் நிறுவனம் சார்பில் இலவச சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், வேலூர் தொகுதி எம்.பி கதிர் ஆனந்த், எம்.எல்.ஏ வில்வநாதன், என்ரிச் சொசைட்டி நிறுவன தலைவர் மாதார் கலீல்ரகுமான்

“ஆம்பூர் புறவழிச்சாலையில் விரைவில் மேம்பாலம்” – எம்.பி., கதிர்ஆனந்த்

உள்ளிட்டோர் கலந்துகொண்டு, ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடைகளை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் பேசிய திமுக எம்.பி கதிர் ஆனந்த், ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள புறவழிசாலை பகுதியில், விரைவில் மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்க உள்ளதாகவும், இதற்கான உத்தரவை தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தன்னிடம் வழங்கியதாவும் தெரிவித்தார்.