திருப்பத்தூர்- மின்சாரம் தாக்கி, குடிநீர் விநியோகம் செய்யும் இளைஞர் உயிரிழப்பு

 

திருப்பத்தூர்- மின்சாரம் தாக்கி, குடிநீர் விநியோகம் செய்யும் இளைஞர் உயிரிழப்பு

திருப்பத்தூர்

திருப்பத்தூரில் மின்மோட்டார் மூலம் தண்ணீர் எடுக்க முயன்றபோது மின்சாரம் தாக்கி டிராக்டர் ஓட்டுநர் உயிரிழந்தார். திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி
ஒன்றியத்திற்கு உட்பட்ட செவ்வத்தூரை சேர்ந்தவர் டிராக்டர் ஓட்டுனர் சதிஷ் (28). இவர் திருப்பத்தூர் நகராட்சி பகுதியில் டிராக்டர் மூலம் வீடுகள் மற்றும்
கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று ஆதியூர் பகுதியில் கட்டுமான பணி நடைபெறும் இடத்திற்கு டிராக்டர் மூலம் தண்ணீர் கொண்டு சென்றுள்ளனர்.

திருப்பத்தூர்- மின்சாரம் தாக்கி, குடிநீர் விநியோகம் செய்யும் இளைஞர் உயிரிழப்பு

அப்போது மின் மோட்டார் மூலம் தண்ணீர் இணைப்பு எடுக்க முயற்சி செய்தபோது மின்சாரம் தாக்கி சதீஷ் உயிரிழந்தார். தகவல் அறிந்த திருப்பத்தூர் கிராமிய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சதிஷ் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.