லாரியில் கடத்தப்பட்ட 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல் – அதிகாரிகள் அதிரடி

 

லாரியில் கடத்தப்பட்ட 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல் – அதிகாரிகள் அதிரடி

திருப்பத்தூர்

வாணியம்பாடி அருகே லாரியில் கடத்திச்செல்லப்பட்ட 15 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நெக்குந்தி சுங்கச்சாவடி அருகே பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெங்களூரு – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த லாரியை தடுத்து நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தபோது, ஓட்டுனர்

லாரியில் கடத்தப்பட்ட 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல் – அதிகாரிகள் அதிரடி

தப்பியோடியுள்ளார். பின்னர் லாரியை சோதனை செய்ததில் அதில் 15 டன்னுக்கு மேல் ரேஷன் அரிசி இருப்பதை உறுதிசெய்த பறக்கும் படையினர், லாரியை பறிமுதல் செய்து வாணியம்பாடி நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர். மேலும், தப்பியோடிய லாரி ஓட்டுநரை தீவிரமாக தேடி வருகின்றனர். இதனிடையே, ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி பகுதிகளில் இருந்து வெளிமாநிலங்களுக்கு லாரி மூலம் அரிசி கடத்தும் சம்பவம் தொடர்கதையாகி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.