நெல்லை இஸ்ரோ மையத்தில் ஊழியர் ஒருவருக்கு கொரோனா உறுதி

 

நெல்லை இஸ்ரோ மையத்தில் ஊழியர் ஒருவருக்கு கொரோனா உறுதி

நெல்லை: திருநெல்வேலியில் அமைந்துள்ள இஸ்ரோ மையத்தில் ஊழியர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (ISRO) அமைந்துள்ளது. இங்கு சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இங்குள்ள ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அங்கு பணிபுரியும் பொறியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

நெல்லை இஸ்ரோ மையத்தில் ஊழியர் ஒருவருக்கு கொரோனா உறுதி

இதைத் தொடர்ந்து மகேந்திரகிரியில் அமைந்துள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்வதற்காக இன்று ஒருநாள் மட்டும் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அந்த இஸ்ரோ ஊழியர் நாகர்கோயில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அவருடன் தொடர்பில் இருந்த 50 -க்கும் மேற்பட்டோர் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்டனர்.