“அதிமுகவை வழிநடத்த வருகை தரும் பொதுச்செயலாளர் அவர்களே” – சசிகலாவுக்கு போஸ்டர் அடித்த அதிமுக நிர்வாகி நீக்கம்!

 

“அதிமுகவை வழிநடத்த வருகை தரும் பொதுச்செயலாளர் அவர்களே” – சசிகலாவுக்கு போஸ்டர் அடித்த அதிமுக நிர்வாகி நீக்கம்!

திருநெல்வேலி மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் சுப்ரமணிய ராஜா கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

“அதிமுகவை வழிநடத்த வருகை தரும் பொதுச்செயலாளர் அவர்களே” – சசிகலாவுக்கு போஸ்டர் அடித்த அதிமுக நிர்வாகி நீக்கம்!

சொத்துகுவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற சசிகலா 4 ஆண்டுகால சிறைவாசம் முடிந்து இன்று விடுதலையாகியுள்ளார். சசிகலா சிறைக்கு சென்றவுடன் அவருடன் அதிமுக நிர்வாகிகள் யாரும் எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது என அதிமுக தலைமை அறிவித்தது. இந்த சூழலில் திருநெல்வேலி மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் சுப்ரமணிய ராஜா சசிகலா விடுதலையையொட்டி, “அதிமுகவை வழிநடத்த வருகை தரும் பொதுச்செயலாளர் அவர்களே வாழ்க.. வாழ்க” என்று போஸ்டர் அடித்துள்ளார்.

“அதிமுகவை வழிநடத்த வருகை தரும் பொதுச்செயலாளர் அவர்களே” – சசிகலாவுக்கு போஸ்டர் அடித்த அதிமுக நிர்வாகி நீக்கம்!

இதுகுறித்து அதிமுகவின் கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் – இபிஎஸ் இருவரும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ” கழகத்தின் கொள்கை குறிக்கோள்களும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த சுப்ரமணிய ராஜா (திருநெல்வேலி மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர்) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். அவருடன் யாரும் எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது என்று கூறியுள்ளனர்.