பூந்தமல்லி முருகன் கோயிலில் திருக்கல்யாண வைபவம் கோலாகலம்
Nov 23, 2020, 11:25 IST1606110945000
சென்னை
சென்னை பூந்தமல்லி முருகன் கோயிலில், கந்தசஷ்டி விழாவையொட்டி திருக்கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. பூந்தமல்லியில் பிரசித்தி பெற்ற வள்ளி, தேவசேனா சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு கந்தசஷ்டி திருவிழாவை ஒட்டி நேற்றிரவு, திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
இதற்காக கோயிலில் பிரத்யேக மேடை அமைத்து, யாகம் வளர்க்கப்பட்டது. அப்போது, சுப்பிரமணி சுவாமி மற்றும் வள்ளி, தேவசேனா ஆகியோருககு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனையும் நடைபெற்றது.
தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பூந்தமல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான
பக்தர்கள் சுவாமியை தரிசித்து சென்றனர்.