சுகருக்கு டாடா சொல்லி ,கொலஸ்ட்ராலில் மாட்டாமல் நம்மை காக்கும் இந்த மசாலா

 

சுகருக்கு டாடா சொல்லி ,கொலஸ்ட்ராலில் மாட்டாமல் நம்மை காக்கும் இந்த மசாலா

உடல் நலப்பிரச்சனைகளில் தற்போது முதன்மையானதாக இருப்பது சர்க்கரை நோய் தான். ஏனென்றால் நாம் அதனை கவனிக்க வில்லை என்றால் உயிர் போக்கூடிய அளவுக்கும் உடலை உருக்குலைத்திடும் குணம் அதற்கு உண்டு. மிக முக்கியமாக அதன் அறிகுறிகள் அவ்வளவாக பெரிதாக தெரிவதில்லை. ரத்தப்பரிசோதனை மூலமாகத்தான் நமக்கு சர்க்கரை நோய் இருக்கிறதா இல்லையா என்பதையே கண்டறிய முடிகிறது.அறிகுறிகளை வைத்து நாம் கண்டு கொள்ள முடியும் என்றாலும் பலரும் அதனை பெரிதாக அலட்டிக் கொள்வதேயில்லை. பின்னர் நோய் முற்றியவுடன் தான் சிகிச்சைகளை ஆரம்பிக்கிறோம்.

சுகருக்கு டாடா சொல்லி ,கொலஸ்ட்ராலில் மாட்டாமல் நம்மை காக்கும் இந்த மசாலா

இன்றைய நவீன உலகத்தில் பலரும் கடைகளில் விற்கப்படும் உணவுகளுக்கு அடிமையாகி விட்டனர். இதனால் 40,50 வயதில் வரும் நோய்கள் இப்போழுதே நம்மை தாக்க தொடங்கிவிடுகின்றது.

உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாவதற்கு காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வதால் தான். அதிலும் தற்போது கடைகளில் அனைவரும் விரும்பி சாப்பிடப்படும் சுவைமிக்க உணவுப் பொருட்கள் அனைத்திலும், கொழுப்புக்கள் தான் பெருமளவில் நிறைந்துள்ளன. இத்தகைய உணவுகளை உட்கொண்டு, அதனால் உடலில் தங்கும் கொழுப்புக்களை கரைப்பதற்கு, தினமும் உடற்பயிற்சி மேற்கொள்வதற்கு கூட நேரம் கிடைக்கவில்லை. இதனால் 40 வயதில் வரக்கூடிய இதய நோயானது, 30 வயதிலேயே வந்துவிடுகிறது.

இதய நோய்கள் மற்றும் நீரிழிவு போன்ற வாழ்க்கை முறை நோய்களைத் தடுக்க மற்றும் கட்டுப்படுத்த நம் பாரம்பரிய மசாலா பொருட்கள் உதவுகின்றன. தற்போது அவை என்னென்ன என்பதை நாமும் தெரிந்து கொள்வோம்.

அந்தவகையில் கொலஸ்ட்ரால், சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவும் ஒரு சில மசாலா வகைகள் என்னெனன் என்பதை பார்ப்போம்.

மஞ்சளில் இருக்கும் குர்குமின் ரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவைக் குறைத்து, நீரிழிவு நோயின் பிற சிக்கல்களைக் கட்டுப்படுத்தும்.

 கருப்பு மிளகு உடலில் காணப்படும் கொழுப்பு செல்களை உடைத்து கொலஸ்ட்ரால் அளவை குறைக்க அலல்து கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

செரிமான ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ள கிராம்பில் காணப்படும் அழற்சி எதிர்ப்பு, கிருமி எதிர்ப்பு மற்றும் வலி நிவாரணி தன்மைகள் நம் உடலின் இன்சுலின் அளவை மேம்படுத்த உதவி, நிரிழிவு நோயின் தாக்கத்திலிருந்து நம்மை பாதுகாக்கிறது.

 இலவங்கப்பட்டையில் அடங்கி இருக்கும் ஆன்ட்டிஆக்ஸிடன்ட் மற்றும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள், உடலில் இருக்கும் கொழுப்பு மற்றும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும் டைப் 2 நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் இலவங்கப்பட்டை சேர்ப்பது அவர்களின் ஆபத்து காரணிகளை குறைக்க உதவும்.

வெந்தயத்தில் காணப்படும் கரையக்கூடிய அதிக நார்ச்சத்து உடலுக்கு குறைவான கார்போஹைட்ரேட்டுகளை உறிஞ்ச உதவுகிறது. இது ரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் பயனுள்ள பொருளாக வெந்தயம் இருக்கிறது.

ஆப்பிள்களில் வைட்டமின் சி மற்றும் பெக்டின் என்னும் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. எனவே இதனை தினமும் ஆப்பிள் சாப்பிட்டு வந்தால், உடலில் தங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை எளிதில் குறைக்கலாம்.

நட்ஸில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகமாக உள்ளாதால், இது கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கும். ஆகவே ஸ்நாக்ஸ் நேரத்தில் பாதாம், வால்நட் போன்றவற்றை உட்கொண்டு, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.

அனைவருக்குமே டீயில் புற்றுநோயை எதிர்க்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் நிறைந்துள்ளது என்று தெரியும். இருப்பினும், அந்த டீயில் ப்ளாக் டீயை குடித்து வந்தால், உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கலாம்.