புது புது பேரோடு வரும் கொரானாவை வேரோடு அழிக்க வெறும் வயிறோடு சாப்பிட வேண்டிய மூணு மெனு .

 

புது புது பேரோடு வரும் கொரானாவை வேரோடு அழிக்க வெறும் வயிறோடு சாப்பிட வேண்டிய மூணு மெனு .

உலகின் பல நாடுகளிலும் கொரோனா பாதிப்பு முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை. உலக வல்லரசு நாடுகள் முதல் பின்தங்கிய நாடுகள் வரை அனைத்தும் கொரோனாவால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.ஒரு நாட்டில் கொரோனா உச்சமடைந்து, பின்னர் குறைகிறது. அத்துடன் வைரஸ் பாதிப்பு முடிந்துவிட்டதாகக் கருதும்போது மீண்டும் அடுத்த அலை தாக்குகிறது. இப்படி அலை அலையாகத் தாக்குவதால் மோசமான பாதிப்புகள் ஏற்படுகின்றன.இப்படி அலை அலையாக வைரஸ் பாதிப்பு ஏற்பட கொரோனா தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பதே முக்கிய காரணமாக வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்தியாவில் கொரோனா 2ஆம் அலை டெல்டா கொரோனாவால் ஏற்பட்டது. இந்த டெல்டா கொரோனா தான் உலகின் பல நாடுகளில் அடுத்த அலையை ஏற்படுத்தி வருகிறது. மேலும், இப்படித் தொடர்ந்து கொரோனா உருமாறுவது சிக்கலை அதிகரித்துள்ளது.

புது புது பேரோடு வரும் கொரானாவை வேரோடு அழிக்க வெறும் வயிறோடு சாப்பிட வேண்டிய மூணு மெனு .

நெல்லிக்காய், பூண்டு போன்ற ஆன்டி ஆக்ஸிடன்கள் நிறைந்த உணவுகள் உங்க நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இந்த உணவுகளை எப்படி காலையில் வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளலாம் இதன் மூலம் என்ன நன்மையை பெற முடியும் என அறிவோம்.

கொரோனா மட்டுமல்ல எந்தவொரு கொடிய நோயாக இருந்தாலும் அதில் இருந்து தப்பிக்க நமக்கு நோயெதிர்ப்பு சக்தி இருப்பது மிகவும் அவசியம். வலுவான நோயெதிர்ப்பு சக்தி ஒன்று மட்டுமே நம் உடலை பல நோய்களில் இருந்து காப்பதற்கு உதவி செய்யும். அந்த வகையில் பார்க்கும் போது வெறும் வயிற்றில் நீங்கள் எடுத்துக் கொள்ளும் உணவுகள் உங்க நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவி செய்கிறது. ஏனெனில் நம் செரிமான அமைப்புக்கும் நம்முடைய நோயெதிர்ப்பு சக்திக்கும் இடையே நிறைய தொடர்பு உள்ளது. நம்முடைய செரிமான அமைப்பு ஆரோக்கியமாக இருந்தால் நம்முடைய நோயெதிர்ப்பு சக்தியும் நன்றாக இருக்கும்.

எனவே கீழ்க்கண்ட உணவுகளை நீங்கள் வெறும் வயிற்றில் எடுத்துக் கொண்டால் உங்க நோயெதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

​பூண்டு

பூண்டில் ஆன்டி பாக்டீரியல் மற்றும் ஆன்டி பயாடிக் தன்மை காணப்படுகிறது. இது இயற்கையாகவே தொற்றை போக்கும் குணங்களை கொண்டுள்ளது. இது உங்க இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. மேலும் நுரையீரல் சம்பந்தமான நோய்களில் இருந்து உங்களை காக்கிறது. எனவே இதை உங்க காலை உணவில் சேர்த்துக் கொண்டு வருவது வேறுபட்ட நோய்களை விரட்ட உதவி செய்யும். 1-2 பூண்டு பற்களை வெதுவெதுப்பான நீரில் வெறும் வயிற்றில் குடிப்பது நல்ல பலன்களை உங்களுக்கு அளிக்கும்.

​நெல்லிக்காய்

நெல்லிக்காயில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய விட்டமின் சி அதிகளவில் உள்ளது. எனவே நெல்லிக்காய் சாற்றை வெதுவெதுப்பான நீருடன் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வரலாம். இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்கள் உங்க சரும ஆரோக்கியத்திற்கும், கூந்தல் ஆரோக்கியத்திற்கும் உதவி செய்யும்.

தேன்

1 டீ ஸ்பூன் தேனை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து வாருங்கள். இது உடல் எடையை குறைக்கவும் மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் உதவி செய்யும். லெமன் சாறு சேர்த்துக் கொள்வது உங்களுக்கு கூடுதல் பலனளிக்கும். இந்த பானத்தில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்கள் இருக்கின்றன. இதன் ஆன்டி பாக்டீரியல் தன்மை உங்க நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவி செய்யும்.

இந்தியாவில் மோசமான பாதிப்பை ஏற்படுத்திய டெல்டா கொரோனா வகையைவிட லாம்ப்டா கொரோனா மோசமான பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என ஆய்வாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.