உடலில் கொரானா குடியிருக்கான்னு தெரிஞ்சிக்க சில குறுக்கு வழிகள்

 

உடலில் கொரானா குடியிருக்கான்னு தெரிஞ்சிக்க சில குறுக்கு வழிகள்

புது கொரோனா வைரஸின் புதிய அறிகுறிகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

கொரோனா பாதிப்புக்குள்ளாகி குணமடைந்த நோயாளிகள் இயல்பு நிலைக்கு திரும்ப 6 மாதங்கள் ஆகும். கொரோனா சிகிச்சைக்கு பிறகு சோர்வு, பலவீனம், தசை வலி போன்ற பாதிப்புகள் மாதங்கள் வரை நீடிக்கலாம்.

உடலில் கொரானா குடியிருக்கான்னு தெரிஞ்சிக்க சில குறுக்கு வழிகள்

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளானவர்கள் நரம்பியல் பாதிப்புக்கான அறிகுறிகளையும் கொண்டிப்பார்கள். அத்துடன் ஞாபக மறதி, தூக்கமின்மை உள்பட நரம்பியல் பிரச்சினைகளையும் எதிர்கொண்டிருக்கிறார்கள்.

இரைப்பை சார்ந்த பிரச்சினைகள், வயிற்றுப்போக்கு, வாந்தி, வயிற்றுப் பிடிப்பு, குமட்டல், வலி ஆகியவை கொரோனா வைரஸின் அறிகுறிகள் என்று புதிய ஆய்வு கூறுகிறது.

மூச்சு விட சிரமப்படுவது, இதயம் படபடப்புடன் துடிப்பது, மார்பில் அசவுகரியம் ஏற்படுவது போன்றவையும் கொரோனா தொற்றுக்கான அறிகுறியாக இருக்கலாம்.

இதயம் வேகமாக துடிப்பது அல்லது இதய படபடப்பு தொடர்ந்து கொண்டிருப்பது கொரோனா தொற்றுக்கான அறிகுறியாக இருக்கலாம்.

வழக்கமான இருமலில் இருந்து வேறுபட்ட ஒலியுடன் தொடர்ச்சியாக இருமல் இருந்து கொண்டிருந்தால் விழிப்பாக செயல்பட வேண்டும்.

​உலர்ந்த வாய்

கொரோனா வைரஸ் தாக்கத்துக்கான அறிகுறியாக இதை சொல்லும் போது வாய்வழி அறிகுறியாகவும் இதுவும் சொல்லப்படுகிறது. உலர்ந்த வாய் பெரும்பாலும் வைரஸ் தொற்றுநோய்களுக்கு பொதுவானது.

​இரைப்பை பிரச்சனை

இருமல் அல்லத் காய்ச்சல் இல்லாத நிலையில் இரைப்பை குடல் பிரச்சனைகள் கொரோனாவுக்கு சாதகமாக உள்ளது. இது கொரோனா தாக்குதலுக்கு உள்ளானவர்களில் காணப்படும் பொதுவான அறிகுறியாகும்.

இரைப்பை குடல் தொற்று அறிகுறிகள் கொரோனா அறிகுறிகளுடன் கடுமையான அறிகுறியாக இருந்தாலும் பல நேரங்களில் குடலில் மட்டுமே கொரோனா அறிகுறிகள் தோன்றூகிறது. இது வயிறு மற்றும் மன உளைச்சலை அதிகமாக்குகிறது. நோய் எதிர்ப்பு மண்டலத்துடன் குடல் தொடர்புகொண்டு பல பணிகளை செய்யலாம்.

​சிவப்பு கண்கள்

கொரோனா நோயாளிகளுக்கு வெண்படல அழற்சி இருக்கலாம் என்று பல ஆய்வுகள் சுட்டிகாட்டுகிறது. வைரஸ் கண்களை ஈரமாக வீக்கமாக வைத்திருக்கலாம். அடிக்கடி கண்களில் அரிப்பை உண்டாக்கலாம்.

கொரோனா பாதிக்கப்பட்ட சிவப்பு கண்களில் சாதாரண வெண்படலத்தை போலன்றி ஒரு கண்ணையும் பாதிக்கும். மூச்ச்த்திணறல் நிலையான கண் எரிச்சல், ஒளியின் உணர்திறன் போன்றவற்றை எதிர்பார்க்கலாம்.

​தலைவலி

கொரோனா காராணமாக ஏற்படும் நரம்பியல் பிரச்சனைகளால் பாதிக்கப்படுபவர்களும் தொடர்ந்து தலைவலி அறிகுறியை தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா பாதிப்பால் வரும் தலைவலி வழக்கமான கடினமான தலைவலிகளிலிருந்து வேறுபட்டதாக சொல்லப்படுகிறது.

சோர்வு

ஏராளமான கொரோனா நோயாளிகள் தொற்றுநோய்க்கான ஆரம்ப அறிகுறியாக பலவினமான சோர்வு குறித்து சொல்கிறார்கள். இருமல், தொண்டைபுண் தவிர ஏராளமான கொரோனா நோயாளிகள் பலவீனமான நிலையை எதிர்கொண்டதாக இங்கிலாந்து நிபுணர்கள் கவனித்திருக்கிறார்கள்.

வைரஸ் தொற்று உண்டாகும் போது சோர்வு என்பது பொதுவான அறிகுறியாக இருந்தாலும் கொரோனா பாதிப்பு இருக்கும் போது அதை சமாளிப்பது மிகவும் கடினமானது.