மிரட்டும் கரும் பூஞ்சையை விரட்டும் வெறும் வயிறு பரிசோதனை.

 

மிரட்டும் கரும் பூஞ்சையை விரட்டும் வெறும் வயிறு பரிசோதனை.

கருப்பு பூஞ்சையை ஆரம்பத்திலேயே கண்டறிந்து முறையாக சிகிச்சை எடுத்துக் கொண்டால் எந்த பாதிப்பும் இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள். ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும். அடிக்கடி வெறும் வயிற்றில் சர்க்கரை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் .

மிரட்டும் கரும் பூஞ்சையை விரட்டும் வெறும் வயிறு பரிசோதனை.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்திருந்தாலும் முகக்கவசம் அணிய வேண்டும்…ஸ்டீராய்டு மருந்துகளை அளவாகப் பயன்படுத்த வேண்டும். தேவைக்கு அதிகமாக எடுத்துக்கொண்டால் இதுபோன்ற 2ஆம்நிலை தொற்று வரக்கூடும். ஆன்டிபயாடிக் மருந்துகளை தேவையின்றியோ, அதிகமாகவோ பயன்படுத்தக் கூடாது. ஸ்டீராய்டுகளை தவறாக பயன்படுத்துவதை கட்டுப்படுத்த வேண்டும்  சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொண்டு, கைகளை அடிக்கடி கழுவ வேண்டும்.

புற்றுநோய், சிறுநீரக, சர்க்கரை நோய் பிரச்சினை உள்ளிட்ட இணை நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்கெனவே நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். இவர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டால் தீவிர சிகிச்சைஅளிக்க வேண்டியுள்ளது. இதேபோல், இணை நோய்கள் இல்லாதவர்களும் தீவிர தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். இவர்களுக்கு தீவிரதொற்றால் நுரையீரல் பாதிப்பு இருப்பதால் ஆக்சிஜன் வசதியுடனும், சிலருக்கு செயற்கை சுவாசத்திலும் (வென்டிலேட்டர்) மூலமாகவும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அவர்களின் உயிரை காப்பாற்றஅதிகமான ஆக்சிஜன் மற்றும் ஸ்டீராய்டு மருந்துகள் கொடுக்கப்படுகிறது. இதன்மூலம் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால், தொற்றில் இருந்து குணமடைந்த பின்னர் எளிதாக ‘கருப்பு பூஞ்சை’ நோயால் பாதிக்கப்படுகின்றனர்.

இந்த ‘கருப்பு பூஞ்சை’ நோய் உடலில் எந்த பகுதியிலும் ஏற்படலாம். எலும்புகளைக் கூட அரிக்கும் தன்மை பூஞ்சைக்கு உள்ளது. குறிப்பாக, தீவிர கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களுக்கு மூக்கு, வாய், கண்களின் கீழ் என முகத்தில் பூஞ்சை ஏற்படுகிறது. இதைக் கவனிக்காமல் விட்டால் பூஞ்சை அரித்துக் கொண்டு கண்களுக்குச் சென்று பார்வைஇழப்பை ஏற்படுத்தி கண்ணை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.அப்படி கண்ணை எடுக்கவில்லை என்றால் பூஞ்சை மூளைக்கு சென்றுவிடும். மூளையைப் பாதித்து உயிரிழப்பையும் ஏற்படுத்தும்.

அதனால், தீவிர கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் கடுமையான தலைவலி, கண்களில் வலி, கண்களில் வீக்கம், கண்கள் சிகப்பு நிறமாக மாறுதல், திடீரென்றுபார்வை குறைதல், சைனஸ் பிரச்சினை, மூக்கில் வலி, வாய் உள்ளிட்டசுற்றியுள்ள பகுதி கருப்பாக மாறுதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்றுசிகிச்சை பெற வேண்டும். குறிப்பாக,கரோனாவில் இருந்து குணமடைந்த சர்க்கரை நோயாளிகள், சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க வேண்டும். அடிக்கடி வெறும் வயிற்றில் சர்க்கரை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் .