காரமாயிருக்கும்னு ஓரமா ஒதுக்கி வைக்கும் இந்த மிளகாயில் இவ்ளோ நன்மைகள் இருக்கா !

 

காரமாயிருக்கும்னு ஓரமா ஒதுக்கி வைக்கும் இந்த  மிளகாயில் இவ்ளோ  நன்மைகள் இருக்கா !

பச்சை மிளகாயின் உடல் நலத்தைப் பற்றி பேசுகையில் நாம் அனைத்து வகையான அயல்நாட்டு மிளகாய்களைப் பற்றியும் கற்பனை செய்வோம். குடைமிளகாய் என்பது வளமையான ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த உணவு என்பது அனைவரும் நன்கு அறிந்து செய்தி தான். இருப்பினும் நாம் உணவோடு சேர்த்து உண்ணுகின்ற சாதாரண பச்சை மிளகாயை சாதரணமாக விட்டு விட முடியாது. இந்திய பச்சை மிளகாயில் உள்ள உடல் நல பயன்கள் உங்களை அதிசயிக்க வைக்கும்.

காரமாயிருக்கும்னு ஓரமா ஒதுக்கி வைக்கும் இந்த  மிளகாயில் இவ்ளோ  நன்மைகள் இருக்கா !

பச்சை மிளகாயுடன் கைப்பிடியளவு பிரண்டையையும் ஒரு சட்டியில் போட்டு, அடுப்பில் வைத்து இரண்டும்  சிவந்து கருகி வரும் சமயம், ஆழாக்களவு தண்ணிர் விட்டு, அரை ஆழாக்களவிற்குச் சுண்டக் காய்கனி இறக்கி வடிகட்டி, வேளைக்கு ஒரு அவுன்ஸ் வீதம் ஒரு நாளைக்கு மூன்று வேளை கொடுத்தால் நீரடைப்பு குணமாகும். நீர்க்கட்டியிருந்தாலும், உடனே உடைத்து நீரை வெளியேறச் செய்யும்.

தீராத தலைவலி குணமாக

மிளகாய், செம்மண், மிளகு இவைகளைச் சமஅளவில் எடுத்து, அம்மியில் வைத்து சிறிதளவு தண்ணீர் விட்டு மைபோல அரைத்து ஒரு இரும்புக் கரண்டியில் விட்டு அடுப்பில் வைத்து சூடேற்றி தானக்கூடிய சூட்டுடன் எடுத்து பொரியில் கனமாகப் பற்று போட்டு விட்டால் தீராத தலைவலியும் குணமாகும்.

ஒரு பக்க தலைவலியாக இருந்தால் இந்த மருந்துடன் ஒரு தலைப்பூண்டு என்னும் ஒற்றை வெள்ளைப் பூண்டையும் சேர்த்து அரைத்துப் போட்டு வந்தால் ஒற்றைத் தலைவலி குணமாகும்

உஷ்ண வயிற்றுவலி குணமாக

உஷ்ணம் காரணமாக வயிற்றில் வலி ஏற்பட்டால், ஒரு பெரிய மிளகாயை எடுத்து, அதன் காம்பைக் கிள்ளிவிட்டு உள்ளே விதைகளை மட்டும் எடுத்து அதை வாயில் போட்டுக் கொஞ்சம் வெந்நீர் விட்டு விழுங்கி விடவேண்டும். ஒரே வேளையில் வயிற்றுவலி குணமாகும்.

காலரா என்னும் வாந்தி பேதிக்கு

வாந்தி நிற்க

வாந்தி பேதி ஏற்பட்டிருப்பதாகத் தெரிந்தவுடன் ஒரு புதுச்சட்டியை அடுப்பில் வைத்து, சட்டிக் காய்ந்தவுடன் 10 கிராம் மிளகாயை அதில் போட்டு வறுக்க வேண்டும்.

பச்சை மிளகாய் பயன்கள் நிறமே தெரியாதபடி கருகியவுடன் எடுத்து வைத்துக் கொண்டு, 212 கிராம் வசம்பைத் தட்டிப் போட்டு அதையும் கருக வறுத்து எடுத்துக் கொண்டு,

வெறும் சட்டியில் ஒருபிடி ஓமத்தைப் போட்டு அது சிவந்து படபடவென்று வெடிக்கும் சமயம் அதை எடுத்துத் தனியே கொட்டிக் கொண்டு சட்டியில் அரை அவுன்ஸ் அளவு தேனை விட்டு அது பொங்கியவுடன் இரண்டு ஆழாக்குத் தண்ணீரை அதில்விட்டு, உடனே வறுத்து வைத்திருக்கும் மருந்துச் சரக்குகளை எல்லாம் அதில் போட்டு மூடிக் கொதிக்க விடவேண்டும்.

நன்றாகக் கொதித்தவுடன் ஆழாக்களவிற்குச் சுண்டக் காய்ச்சி, அதை வடிகட்டி உடனே இரண்டு அவுன்ஸ் அளவு உள்ளுக்குக் கொடுத்துவிட்டு, இரண்டு மணிநேரம் கழித்து மறுபடி இரண்டு அவுன்ஸ் அளவு கொடுக்க வேண்டும்.

மீதிக் கஷாயத்தில் மேலும் தண்ணீர் விட்டு, அடுப்பில் போட்டு வைத்துக் கொண்டு, இதே நீரை அடிக்கடி குடிக்கக் கொடுத்து வந்தால் வாந்திபேதி குணமாகும்.

பசி எடுப்பதாகத் தோன்றினால் நெற்பொரியைக் கஞ்சியாகச் செய்துக் கொடுக்கலாம். பிறகு புனர்பாகம் கொடுத்து வந்தால் பூரணமாகக் குணமாகும்.

அண்ட வாய்விற்கு

மூன்று மிளகாயை எடுத்து, இரண்டு கைப்பிடியளவு சுழற்சியிலையையும் சேர்த்து அரைத்து அதில் ஒரு கொட்டைப் பாக்களவு எடுத்து வாயில் போட்டு விழுங்கி விடவேண்டும்.

 கோழியை நறுக்கி சூப்பு வைத்து முதலில் கறியைச் சாப்பிட்டுப் பிறகு சாதம் சாப்பிட வேண்டும். சூப்பையும் குடிக்க வேண்டும்.

இந்த விதமாக வாரத்தில் ஒரு குறிப்பிட்ட நாளில் செய்ய வேண்டும். இதே போல மூன்று முறை செய்தால் போதும் அண்ட வாய்வு, விரை வீக்கம் குணமாகும் .

அடிபட்ட காயத்திற்கு

மிளகாய் வறுத்துத் தூள் செய்துக் கொண்டு அதே அளவு உப்புத் தூளையும் சேர்த்து நன்றாகக் கலந்து அடிபட்ட காயத்தில் வைத்துக் கட்டி வந்தால் அடிபட்ட காயம் ஆறும்.

காது சம்பந்தமுள்ள வலிகள் குணமாக

பச்சை மிளகாய் பயன்கள்

காதில் வலி, காதுக் குத்தல், காதில் இரைச்சல், காதில் சீழ்வடிதல், காது நெகிழ்ச்சி இவைகளுக்கு, காதைச் சுத்தம் செய்துவிட்டு, ஒரு சிறு இரும்புக் கரண்டியில் கொஞ்சம் நல்லெண்ணெயை விட்டு அது காய்ந்தவுடன் அதில் ஒரு மிளகாயை விதையுடன் கிள்ளி போட்டு அது நன்றாகச் சிவந்தவுடன் இறக்கி வைத்து தாங்கக்கூடிய சூட்டுடன் எடுத்து காதில் மூன்று துளிவீதம் விட்டு, பஞ்சு வைத்து அடைத்து விடவேண்டும்.

காலை, மாலை இதேபோல் தொடர்ந்து செய்து வந்தால் எல்லாவிதமான காது சம்பந்தமான கோளாறுகளும் குணமாகும்

பச்சை மிளகாயை உட்கொண்டால், நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் இடர்பாடு குறைகிறது. புகைப்பிடிப்பவர்கள் இதனை கவனிக்க வேண்டும். காரணம் அவர்கள் தானே தினமும் தங்களின் நுரையீரலை புகைத்து கொண்டிருக்கின்றனர்.

காரமாயிருக்கும்னு ஓரமா ஒதுக்கி வைக்கும் இந்த  மிளகாயில் இவ்ளோ  நன்மைகள் இருக்கா !

சராசரியான இந்தியர்கள் பச்சை மிளகாய் உண்ணும் பழக்கத்தை கொண்டுள்ளனர். பச்சை மிளகாயின் உடல் நல பயன்கள், நாம் நம் உணவோடு உண்ணும் பொதுவான மிளகாய்களிலேயே உள்ளது. பச்சை மிளகாயில் நமக்கு தெரியாத பல உடல் நல பயன்கள் அடங்கியுள்ளது. அதனால் தான் உணவிற்கு பச்சை மிளகாயை உண்ணுவதே நல்லதாகும்.